Posts

நித்தமும் கயல் - பாகம் 2

Image
            கயல் என்ற அந்தப் பெயரைக் கேட்ட உடனே தாத்தா (நித்தன்) பதட்டமாக நாற்காலியில் உட்கார்ந்தபடியே தன் கண்ணாடியை கழற்றி கீழே வைக்கிறார். அப்போது தாத்தாவை அவரின் பேரன் "ஏன் தாத்தா இவ்வளவு பதட்டமாக இருக்கீங்க?" என்று கேட்டான். தாத்தாவின் மகன் கிருஷ்ணன் "பின்ன நீ இப்படி காதல் கீதல் என வந்து நில்லு.. அவர் பதட்டம் அடையாம இருப்பாறு.." என்று சொன்னார்.    அதனைத் தொடர்ந்து, மணியின் தந்தைக்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து தனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதனால் மணியின் தந்தையோ தனது போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். பிறகு, மணியோ தன் தாத்தா (நித்தன்) விடம் "தாத்தா, ஒழுங்கா சொல்லுங்க. நீங்க அந்த கயல் என்ற பெயரைக் கேட்ட உடனே இவ்வளவு பதட்டமா? நல்லாவே தெரியுது. ஒழுங்கா சொல்லுங்க, யாரு தாத்தா அது?" என்று கேட்டான்.    அதற்குத் தாத்தா " பெயரளவில் கூட அது வெறும் பெயர் என்று சொல்ல முடியாது. என் வாழ்வில் பெரும் அங்கத்தை வகித்த ஓர் அழகிய பெயர் தான் அது " என்று சொன்னார். இதனைக் கேட்ட பேரன் "ஓ, அழகிய பேரா?" என்று கேட்டான். ...

நித்தமும் கயல் : பாகம் - 1

Image
                                                                                                                                      " நித்தமும் கயல்"         முதலில், அனைத்து வாசகர்களுக்கும் ஒரு அழகான, மிகப் பெரிய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். "என்னடா இவன், எடுத்தவுடனே வணக்கம் மட்டும் இல்லாமல் உடன் நன்றியையும் சொல்றானே?" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் எனத் தெரிகிறது. உங்கள் நேரத்தை ஒதுக்கி, ஒரு அழகான காதல் கதையைப் படிக்க வந்துள்ளீர்கள் அல்லவா? அதனால்தான் இதைச் சொல்கிறேன். எனது பெயர் வெ. தமிழ்பாண்டி. இதற்கு மேலும் விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்காமல், வாருங்கள்...ஒரு அழகான காதல் கதைக்குள் செல்லலாம்! ஓர் அ...

இனியாழினி - பாகம் 8

Image
  இருவரும் புரியாமல் நின்ற அதே நேரத்தில், அந்த கனவு கலைந்து போனது. கனவு கலைந்ததும், இருவரும் யார் இவர்களுக்கு இடையில் இடையுராக வந்தது? அந்த பெண் யாராக இருப்பாள்? என்று யோசித்துக் கொண்டே இரவையும் கடந்தனர். மறுநாள், இனியன் தன் தாத்தாவின் வீட்டை விட்டு தனது சொந்த ஊரான சென்னைக்கு விரைந்தான். அதேபோல், யாழினியும் சென்னைக்கு புறப்பட்டாள். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கனவை நினைத்து சற்று மகிழ்ச்சியுடன் சென்னையில் வந்து சேர்ந்தனர். சென்னைக்கு வந்தவுடன், யாழினி கயலிடம் கிராமத்தில் இனியனை சந்தித்த நிகழ்வு முதல், கனவில் இனியனை சந்தித்தது வரை சொன்னாள். அதற்கு கயல் சிரித்தபடி, "அப்போ இன்னொரு எபிசோட் ஆரம்பிக்க போகுது போல!" என்று கிண்டல் செய்தாள். அதற்குப் பிறகு அந்த நாளும் சிரிப்புகளுடன் முடிந்தது. மறுநாள் காலை,  கல்லூரி செல்லும் போது, இனியன் மற்றும் நித்தன் இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். "இனியன் கிராமத்தில் நடந்ததை நித்தனிடம் பகிர்ந்தானா?" என்ற உங்கள் கேள்வி புரிகிறது. இனியன், தனது தாத்தாவின் கிராமத்தில் யாழினியை சந்தித்தது முதல் கனவின் பின்விளைவுகள் வரை கொஞ்சம் கற்பனைச் சேர்...

இனியாழினி - பாகம் 7

Image
யாழினியின் பின்னாளே சென்ற இனியனை தூரத்தில் இருந்து யாழினியின் அம்மா பார்த்துவிட்டார். தூரத்தில் இருந்து பார்த்த யாழினியின் அம்மா, யாழினியின் அருகில் வந்து, "ஏய்! யாரு டி இவன்?" எனக் கேட்டார். அதற்கு யாழினியின் பின்னால் இருந்த இனியன், "அம்மா, நான் இனியன். யாழினி ப்ரெண்ட்," எனத் தன்னை அறிமுகம் செய்தான். யாழினியின் அம்மா, "ப்ரெண்டா? இதுவரை நான் உன்னை இவள் கூட பார்த்ததே இல்லையே..." என ஆச்சரியமாக கேட்டார். "அது அம்மா... நானும் யாழினியும் ஒரே கல்லூரியில் தான் படிக்கிறோம்," என்றான் இனியன். "ஒரே கல்லூரியா? ஆனா இவ சென்னைல படிக்கிறாள் தானே!" என சற்றே காட்டமாக கேட்டார். "ஆமா அம்மா, நானும் சென்னைல தான்!" என்றான் இனியன். "சென்னைல இருந்து நீ இங்கே எப்படி வந்தே?" என விசாரணை தொடர்ந்தார் யாழினியின் அம்மா. "அம்மா, நான் தாத்தாவைப் பார்க்கத்தான் வந்தேன் எங்கள் தாத்தா இதே ஊர்தான்," என்றான் இனியன். "தாத்தாவா? இதே ஊர்தானா...? , யார் அது? உங்கள் தாத்தா பெயர் என்ன?" எனக் கேட்டார். "எங்கள் தாத்தா பெயர் சுந்தரம்,"...

இனியாழினி - பாகம் 6

Image
  --- "யார் என் பெயருக்குப் பக்கத்தில் அழகானவள் என எழுதியிருக்கிறார்கள்!" என்று யாரென்று அறிய ஆர்வமாகச் சுற்றிப் பார்த்தாள் யாழினி. அப்போது, பின்னால் இருந்து, "நான் தான் அது எழுதியது!" என ஓர் குரல் பதட்டமாக கேட்டது. ஆச்சரியமாக அவள் திரும்பிப் பார்த்தாள். ஆம், அது நம் இனியன் தான்! ஆச்சரியத்துடன் யாழினி, "நீங்க எப்ப இங்கே வந்திங்க?" எனக் கேட்டாள். "நான் இன்னைக்கு காலையில் தான் தாத்தா வீட்டுக்கு வந்தேன்," என்றான் இனியன். "சரி, 'நான் தான் எழுதியது'னு சொன்னிங்கலே. ஏதைப் பற்றி சொல்றீங்க?" என அவன் கண்ணில் நேராகக் கேட்டாள் யாழினி. அதற்கு இனியன், "அது நான் எழுதிய  கவிதையை தான்! அதான் நான் எழுதியதாக சொன்னேன் ப்பா," எனச் சொல்லி சமாளித்தான். "கவிதையா! நான் வேற நினைத்தேன்," என்றாள் யாழினி, தலை சாய்த்து குனிந்து. அதற்கு இனியன், "வேறனா? வேற எதை எழுதியதாக நீ நினைத்த?" என மெல்ல கிண்டலாகக் கேட்டான். "நான் என்ன நினைத்தேனோ அதுவெல்லாம் ஓரமிடுங்கள். நீங்க எழுதிய கவிதையை காட்டுங்கள்," என்றாள் யாழினி. அதற்கு இனிய...

இனியாழினி - பாகம் 5

Image
  இருவரும் கண்ட அந்த கனவில், இருவருக்கும் இடையில் வந்த அந்தப் பெண் யார் என அறிய, இனியனும் யாழினியும் உங்கள் மாதிரியே ஆர்வமாக இருந்தனர். கவலைப்படாதீர்கள், கதையின் போக்கில் புரிய வரும் யார் அந்தப் பெண், ஏன் இப்போது இவர்கள் இடையில் கனவில் வந்தாள் என்றும். சரி, வாங்க. கனவு கலைந்த பிறகு, இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். பொதுவாக நமக்கெல்லாம் கனவு வந்தால், அதை மறக்கடிக்க வேறு ஒரு கனவு வரும். அதே போலத்தான், அவர்களுக்கு அன்று இரவு வேறு ஒரு கனவு வந்தது. ஆனால், வேறு ஓர் கனவு வந்தபோதும், அவர்களின் முதல் கனவின் நினைவுகள் மாறவில்லை. காரணம், முதல் கனவின் தொடர்ச்சியாகத்தான் அடுத்த கனவும் வந்தது. அந்த கனவில் முன்பு போல், அவர்களுக்கு இடையில் மீண்டும் அதே பெண் வந்தாள். இருவரும், "நீ யார்? எங்களுக்கு இடையில் வருகிறாய்?" என கேட்டனர். அப்போது அந்தப் பெண், "நான் யாரா? இந்தக் கவிஞனின் காதலியாக போறவள்" என்று சொல்கிறாள். அத்துடன், இருவருக்குமான கனவும் கலைகிறது. பிறகு இப்படியே கனவில் அந்த இரவும் இருவருக்கும் முடிகிறது. காலை எழுந்தவுடன், யாழினி யோசனைகள் பல செய்து ஒரே குழப்பமாகவே இ...

இனியாழினி - பாகம் 4

Image
  தனது இடத்தில் இருந்து எழுந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகம் செய்ய முன் நின்றாள் யாழினி. அப்போது அவள், "எனது பெயர் யா..." எனச் சொல்ல வந்தாள். ஆனால், தனது பெயரைச் சொல்லும் போது, இனியனை பார்த்துவிட்டாள்! இனியனைப் பார்த்த யாழினிக்கு ,"இவனை தான நாம்ப நம்ப கிராமத்தில் அன்று பார்த்தோம் அவன் என்னே இங்கு இருக்கிறான்..!", என ஓர் ஆச்சரியம். யாழினியை மீண்டும் பார்த்ததும், இனியனின் மனதில் எல்லை யில்லா ஓர் சந்தோஷம் மனதில் மலர்ந்தது! யாழினி தடுமாறி நின்ற போது, "ஏம்மா தடுமாறுற? தடுமாறாம சொல்லுமா!" என ஆசிரியர் கேட்க, யாழினி பதட்டமாக நின்றாள். அதற்கிடையில், நித்தன் இனியனிடம், "டேய், என்னடா! இவள் பெயரைச் சொல்லுவதற்கே இப்படிச் தடுமாடுற?" எனக் கேட்க, இனியன் சிரித்தபடியே, "அவள் பெயரை அவள் சொல்லமாட்டாள்? நான் சொல்லட்டுமா?" எனக் கேள்வி கேட்டான். "நீ எப்படி அவள் பெயரைச் சொல்லவ..?,உனக்கு எப்படி அவள் பெயர் தெரியும்?" என ஆச்சரியமாகச் சொன்னான் நித்தன். இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, ஆசிரியர், "ஏய், ஏன் பேசுறீங்க? அமைதியாக இருங்க!" என்று கடிந...